கண் அசைந்தால்
காதலா
காமமா
கோவமா
கனிவா என
கை பிசைந்து
காணவே
கரை புரண்டு ஓடிவிட்டது
காலம் எனக்கு
உரைப்பாய் சமைத்து
உனக்கு பரிமாறினால்
உரைப்பது இல்லை ஓரு
வார்த்தை
உப்பு ஓரு நாள்
உதவாமல்
விதைப்பு இல்லா
உணவாகினால்
வர்ணங்கள் நம்
வீட்டு மேசை எங்கும்
வீட்டில் சோற்றை சுமந்து
வெறிக்கும் என் பார்வையில்
விரிந்து
மகரந்தமாய்
மலர் சூடி
மணம் வீச
மடித்து தழுவிய
மாம்பிஞ்சு புடவையில்
மனசுக்கு அருகிலே நின்றாலும்
மலர்ச்சியாய் ஒன்றும்
மாறுவதில்லை உன் முகம்
மாறுதலாய் கொஞ்சம் என்னையும் கவனிப்பாய்
மறு நிமிடம் திறும்பிவிடும் உன்
மன கவனம்
மலையாய் குவிந்து இருக்கும்
மடல்களின் மீது என்னிடம்
மகிழ்ந்து என்ன
மொழிவது என்றோ
மடல்கள் கவசமாய் உன்னை
மறைக்க விரும்புகிறாய்
சுருக்கமாய் என் மனது
சோர்வை
சுமந்து வாசல் நோக்கி
செல்லும் கால்கள்
இத்தனை கவனமாய் என்னை
இயற்றிய
இறைவன் மேல் சின்னதாய்
இயலாமல் எழுந்து அமுங்கும் கோவம்
இருக்கட்டும் என்னை தான்
இப்படி ஒரு நிலையில்
இருத்தி விட்டாய்
இங்கே யரேனும்
இழந்து
இருக்கின்றனறோ உன் கவனம் எல்லாம் என்று
இறைச்சலாய் ஒரு கேள்வி
என் எண்ணங்கள் அறிய பெற்ற
எனக்கு உதித்த இளவல்களும்
எக்கமாய்
பல முறை பத்து
படி ஏறி சோர்ந்து இரண்டு
படி இறங்கி உன்னிடம்
படித்தது என்னவோ
பயன் இல்லா
பாசங்கள் தான்
உறவற்ற ஓரிடம்
உனக்கு புகலிடமாய்
உரையாமல்
உதிரத்தாலும் உள்ளார்ந்த அன்பை சுமந்த நாங்கள் எப்படி
உன் உறவுகளாய்
உடமைகளாய் ஆனோம்.....ஆக்கப்பட்டோம்
விளைந்திடாத
விதையாய் நான்
விட்டு செல்லும் கேள்வி இது தானோ!
No comments:
Post a Comment