Pages

Tuesday, January 11, 2011

கவிதை

கண் அசைந்தால்
காதலா
காமமா
கோவமா
கனிவா என
கை பிசைந்து
காணவே
கரை புரண்டு ஓடிவிட்டது
காலம் எனக்கு

உரைப்பாய் சமைத்து
உனக்கு பரிமாறினால்
உரைப்பது இல்லை ஓரு
வார்த்தை
உப்பு ஓரு நாள்
உதவாமல்
விதைப்பு இல்லா
உணவாகினால்
வர்ணங்கள் நம்
வீட்டு மேசை எங்கும்
வீட்டில் சோற்றை சுமந்து
வெறிக்கும் என் பார்வையில்
விரிந்து

மகரந்தமாய்
மலர் சூடி
மணம் வீச
மடித்து தழுவிய
மாம்பிஞ்சு புடவையில்

மனசுக்கு அருகிலே நின்றாலும்
மலர்ச்சியாய் ஒன்றும்
மாறுவதில்லை உன் முகம்
மாறுதலாய் கொஞ்சம் என்னையும் கவனிப்பாய்
மறு நிமிடம் திறும்பிவிடும் உன்
மன கவனம்
மலையாய் குவிந்து இருக்கும்
மடல்களின் மீது என்னிடம்
மகிழ்ந்து என்ன
மொழிவது என்றோ
மடல்கள் கவசமாய் உன்னை
மறைக்க விரும்புகிறாய்

சுருக்கமாய் என் மனது
சோர்வை
சுமந்து வாசல் நோக்கி
செல்லும் கால்கள்

இத்தனை கவனமாய் என்னை
இயற்றிய
இறைவன் மேல் சின்னதாய்
இயலாமல் எழுந்து அமுங்கும் கோவம்
இருக்கட்டும் என்னை தான்
இப்படி ஒரு நிலையில்
இருத்தி விட்டாய்
இங்கே யரேனும்
இழந்து
இருக்கின்றனறோ உன் கவனம் எல்லாம் என்று
இறைச்சலாய் ஒரு கேள்வி

என் எண்ணங்கள் அறிய பெற்ற
எனக்கு உதித்த இளவல்களும்
எக்கமாய்

பல முறை பத்து
படி ஏறி சோர்ந்து இரண்டு
படி இறங்கி உன்னிடம்
படித்தது என்னவோ
பயன் இல்லா
பாசங்கள் தான்

உறவற்ற ஓரிடம்
உனக்கு புகலிடமாய்
உரையாமல்
உதிரத்தாலும் உள்ளார்ந்த அன்பை சுமந்த நாங்கள் எப்படி
உன் உறவுகளாய்
உடமைகளாய் ஆனோம்.....ஆக்கப்பட்டோம்

விளைந்திடாத
விதையாய் நான்
விட்டு செல்லும் கேள்வி இது தானோ!

No comments:

Post a Comment